மயிலாடுதுறை மாவட்டம் கண்டியூர் கிராமத்தில், இரவு நேரத்தில் வீட்டில் இருந்து பெண் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துள்ளனர். அப்போது, வீட்டின் உரிமையாளரான பிரேமா என்ற இளம் பெண் தீயில் எரிந்தபடி வலி தாங்க முடியாமல் கதறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் பிரேமாவின் கணவர் அகத்தியனை கைது செய்தனர். இவர் வீட்டிற்கு பின்புறம் மறைந்து இருந்துள்ளார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால், அகத்தியன் வேலைக்குச் செல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். மேலும், எந்நேரமும் குடிபோதையில் இருந்ததால், மனைவி பிரேமா அவரைக் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வந்த அகத்தியனை பிரேமா மீண்டும் கண்டித்தபோது, ஆத்திரமடைந்த அகத்தியன் தன் மனைவியைச் சரமாரியாகத் தாக்கியதுடன், வண்டியில் வைத்திருந்த டீசலை அவர் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். பிரேமா தற்போது மருத்துவமனையில் 70% காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…