“அய்யோ!.. காப்பாத்துங்க… பூஜைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… போலி சாமியாரின் வெறிச்செயல்… மகாராஷ்டிராவை உலுக்கிய இரட்டை கொலை”…!!

Spread the love

மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் சக்ரி பகுதியில், சனி அமாவாசை இரவன்று (மே 17) நடந்த கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 25 வயதான ஜெயஸ்ரீ ககுஸ்தே மற்றும் அவரது நண்பர் அக்ஷய் சோனாவானே ஆகிய இருவரும், யோகேஷ் கைர்னார் என்ற போலி சாமியாரின் ஆசிரமத்திற்குப் பூஜைக்காகச் சென்றுள்ளனர். அங்கு பூஜை முடிந்ததும் ஜெயஸ்ரீயை வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்தப் போலி சாமியார், அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார். அதற்கு ஜெயஸ்ரீ சத்தமிட்டு பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சாமியார் அவரைத் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை டெம்பே-வர்தானே பகுதியில் வீசியுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலையைத் தொடர்ந்து, தன்னுடனேயே இருந்த அக்ஷய் சோனாவானே இந்தத் தீய செயலை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சம் போலி சாமியாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாட்சியை மறைப்பதற்காக அக்ஷயையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அக்ஷயின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துள்ளார். சம்பவ இடத்தில் மாட்டு வண்டியின் சக்கரத் தடயங்கள் இருந்ததை அடுத்தகட்ட விசாரணையின் போது காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காட்டுப் பகுதியில் அக்ஷயின் உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆரஞ்சு நிறக் கைக்குட்டைதான் இந்த மர்ம வழக்கின் சுருள அவிழ்க்க முக்கியக் காரணமாக அமைந்தது. மோப்ப நாய்கள் அந்தக் கைக்குட்டையை மோப்பம் பிடித்து, நேராக யோகேஷ் கைர்னாரின் ஆசிரமத்திற்கே போலீசாரை அழைத்துச் சென்றன. இதனைத் தொடர்ந்து, நிஜாம்பூர் போலீசார் போலி சாமியாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது இரட்டைக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“கல்யாணம் பண்ணதே தப்பா போச்சு”… ட்விஷா வழக்கில் அதிரடி திருப்பம்… சடலத்தை தூக்கி வரும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா (33) என்ற பெண்ணுக்கும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்…

39 seconds ago

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு… பொதுமக்களுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…

56 seconds ago

10th படித்திருந்தால் போதும்… ₹21,000 சம்பளம்.. 9,195 காலிப்பணியிடங்கள்… இன்றே கடைசி.. உடனே முந்துங்கள்…!!!

மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான மத்திய வழிநடத்தல் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9,195 காவலர் (Constable…

2 minutes ago

வீட்டிற்கே வந்த அதிகாரிகள்… தவெக எம்எல்ஏ கனிமொழி செய்த காரியம்… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி… பதறிய கோவை அரசியல் களம்…!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல்…

8 minutes ago

“எனக்கு அந்த நோய் இருக்கு!”… மசாஜ் என்ற பெயரில்61 பெண்களை வேட்டையாடிய இந்திய வம்சாவளி வாலிபர்… குற்றவாளின் பகீர் வாக்குமூலம்…!!!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள '4ever' மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் சுமித்…

12 minutes ago

“காரை நிறுத்து.. நான் போறேன்”…. அடையாறு பாலத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் குதித்த அந்த 5 நிமிட கொடூரம்… ஓட்டுநர் சொன்ன கண்ணீர் வாக்குமூலம்…!

தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த…

17 minutes ago