“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

Spread the love

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல் பெட்டியில் வைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நீதி கேட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 13 அன்று, அவரது தாய் கிரிஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செலுத்தப்பட்ட தவறான ஊசி காரணமாக கடுமையான தொற்று (Infection) ஏற்பட்டதாக விகாஸ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கினால், அவரது தாயின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி கையைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த ராணுவ வீரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக கமிஷனர் அலுவலகத்தை நாடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தனது தாயின் கையோடு காவல் அலுவலகத்திற்கு வந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தைக் கண்ட போலிஸ் கமிஷனர், உடனடியாக இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

5 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

26 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

30 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

44 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

59 minutes ago

“கணவர் இறந்த 25 வது நாள்”… அண்ணியைச் சீரழித்த கொழுந்தன்.. தட்டிக் கேட்ட மாமனாருக்குக் கிடைத்த தண்டனை..!!

கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…

1 மணத்தியாலம் ago