ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இது தவிர, மனிதாபிமான அடிப்படையில் இந்தியப் பொதுமக்கள் ஈரானுக்கு நிதியுதவி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் முறையான வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டு, ஆதரவு அளித்து வரும் இந்தியர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் நிதி வழங்கும்போது தூதரகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வங்கி கணக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத பிற கியூஆர் (QR) குறியீடுகளையோ அல்லது யுபிஐ (UPI) முகவரிகளையோ நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் இந்த நிவாரணப் பணிகள், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. போரினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இந்த மருத்துவ மற்றும் நிதி உதவிகள் பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…