மனைவி இல்லாத நேரத்தில்… கள்ளக்காதலனை தேடி வீட்டிற்கு சென்ற காதலி… பெற்றோர்கள் செய்த பயங்கரத்தால் அதிர்ச்சி…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 31 வயதுப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சந்தீப் என்பவரது வீட்டில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. திருமணமான மம்தா என்பவருக்கும், சந்தீப்பிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சந்தீப்பிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மம்தா நேற்று முன்தினம் இரவு சந்தீப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோரும் சகோதரிகளும் வீட்டில் இருந்துள்ளனர். சந்தீப்பின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

நேற்று காலை 6 மணி அளவில், சந்தீப் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற நேரத்தில், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் மம்தாவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், வீட்டில் இருந்த கோடரியால் மம்தாவைத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தீப் திரும்பி வந்தபோது, மம்தா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது பெற்றோரே இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தீப் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்ததிலிருந்து சந்தீப்பின் பெற்றோரும், அவரது நான்கு சகோதரிகளும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago