ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் சேவை செய்ய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. ஈரோட்டில் நடைபெற உள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொள்கின்றார். வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் ஈரோடு வரவுள்ளதால் அதற்கான பணிகள் முழு வயிற்றில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலீஸ் சார்வில் இரண்டு மணி நேரம் அதாவது அன்று பகல் 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மையான ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி, மக்கள் சக்தியால் வரும் ஆட்சி வரும் நல்ல நாளை நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கரூர் ரோடு ஷோ, புதுச்சேரிக்கு பிறகு தமிழ் மண்ணான ஈரோட்டில் விஜய் கால் வைக்கின்றார். 18 என்றால் 9 எண் வருகிறது. இதில் அனைத்து நட்சத்திரங்களும் அடங்கும். தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள்.
ஆம்புலன்ஸ், கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், விஜய் வரும் வழி, பொதுமக்கள் வருவதற்கு, கலைந்து செல்ல தனி இடமாகியவை போலீஸ் விதிமுறையாக இருந்தது, அதனை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே சமயம் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பல முன்னாள் தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாகவும் அதற்கான வேலைகளை செங்கோட்டையன் தீவிரமாக செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…