ஐயோ..! சிறுவனை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கிய ஒட்டுமொத்த கிராமத்தினர்.. துணிச்சலா? அல்லது முட்டாள்தனமா..? நடந்ததுஎன்ன ..? வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் ஆழமான கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக கிராம மக்கள் கையாண்ட விசித்திரமான முறை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணறு மிகவும் குறுகலாகவும் ஆழமாகவும் இருந்ததால், பெரியவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு சிறுவனின் கால்களைக் கயிற்றால் கட்டி, அவனைத் தலைகீழாகக் கிணற்றுக்குள் இறக்கி ஆட்டுக்குட்டியை மீட்க கிராமத்தினர் முடிவு செய்தனர். உயிருக்கு ஆபத்தான இந்த மீட்புப் பணியின் போது, அந்தச் சிறுவன் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு ஆட்டுக்குட்டியைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆட்டுக்குட்டியின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் துணிச்சலைப் பாராட்டும் அதே வேளையில், ஒரு விலங்கைக் காப்பாற்றச் சிறுவனின் உயிரைப் பணயம் வைத்தது சரியா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சியில் சிறுவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Soundarya

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

4 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

7 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

16 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

22 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

27 minutes ago