மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த 89 வயது மூதாட்டி இருளாயி, உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற இவரால் ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது. இதுகுறித்து அவரது உறவினர்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்டதையடுத்து, விற்பனையாளர் நாகராணி தனது உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி ஒரு நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார்.
அரசு விதிகளின்படி மூதாட்டியின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்ற ரேஷன் ஊழியர்கள், அவரிடம் கைரேகைப் பதிவைப் பெற்றுக்கொண்டனர். பின்னர், பொங்கல் பரிசுத் தொகையான 3,000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலை ஆகியவற்றை அவரது இல்லத்திலேயே வைத்து வழங்கினர். ரேஷன் ஊழியர்களின் இந்த மனிதாபிமானச் செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் மூதாட்டியின் உறவினர்கள் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…