பீகார் மாநிலம் மாதேபுரா இரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், மனிதநேயத்தின் மீதே ஒரு மிகப்பெரிய வினாக்குறியை எழுப்பியுள்ளது. நடைமேடையில் சலனமற்று கிடந்த தாயின் உடலுக்கு அருகில் நின்று, அவரது இரண்டு பிஞ்சு மகள்களும் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சைப் பதறவைத்தது.
இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முகமது முர்ஷித் என்பவரை காதலித்து கரம் பிடித்த காஜல் என்ற அந்தப் பெண், இன்று அதே கணவனால் வஞ்சிக்கப்பட்டு அநாதையாகக் கிடந்த அவலம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“>
மேலும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்படி, தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, முர்ஷித் காஜலை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், தனது குற்றத்தை மறைக்க காஜலுக்கு உடல்நலம் சரியில்லை என்று நாடகமாடி, அவரை மாதேபுரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு ‘மருத்துவரை அழைத்து வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அந்த இரண்டு குழந்தைகளையும் சடலத்தின் அருகிலேயே தவிக்கவிட்டு முர்ஷித் தப்பியோடியுள்ளார். பசியும் பயமும் கலந்த நிலையில், தங்களின் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அந்தக் குழந்தைகள் அழுதது, உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் குரூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…