தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. சென்னை நிகழ்வில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், அதில் 200-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் நேரடியாகப் போட்டியிடுவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் கரூர் தொகுதிக்கான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் தனி கவனம் பெற்றுள்ளது. தவெக-வின் கரூர் மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் அங்கு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் வெளிவந்தவர் மதியழகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் ஒருவருக்கு விஜய் வாய்ப்பளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தொகுதியைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், இந்த முறை அவர் கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளதால், கரூரில் அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. செந்தில் பாலாஜியின் இடமாற்றம் அதிமுகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், மதியழகனை விஜய் அங்கு நிறுத்தியிருப்பது வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு முக்கிய அணிகளும் களம் காண்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் இழுபறி நிலை நீடிக்கிறது. குறிப்பாக, கரூர் போன்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய முகங்கள் களம் இறங்குவது தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மதியழகனுக்கு இருக்கும் உள்ளூர் செல்வாக்கு, விஜய்யின் இந்தத் திட்டமிட்ட வியூகத்திற்கு வெற்றியைத் தேடித்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…