சென்னையில் வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளைத் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை ரயிலில் பயணித்த அவர், நந்தனத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கத்திப்பாரா பகுதி இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முன்னேற்றங்களைப் பாராட்டியதுடன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பகல் நேரப் பணிகளுக்குப் பதிலாக இரவு நேரங்களில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ பாதைக்கான அனைத்துப் பாதுகாப்பு பரிசோதனைகளும் நிறைவடைந்து மே மாதத்திலேயே அனுமதி பெறப்பட்டுள்ளதால், பணிகள் முடிவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவுள்ளது. 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, அலுவலகம் மற்றும் பள்ளிச் செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…
கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த வாணி (22) என்ற இளம் பெண், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில்…
2004-ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த அமனே பஹ்ராமி என்ற இளம் பொறியியல் பட்டதாரி, மஜித் மொவாஹெடி என்ற தனது சக…
சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…