சென்னை அண்ணா சாலையில் உள்ள bsnl அலுவலகத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தீ பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகை மூட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்து அலுவலக காவலர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்த நிலையில் சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அங்கு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஏராளமான மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. அண்ணாச்சாலை பகுதியில் பிஎஸ்என்எல் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே தீ விபத்து காரணமாக பிஎஸ்என்எல் சார்ந்த பல்வேறு அரசு சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. குறிப்பாக EB Bill கட்ட முடியாமல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல 108 மற்றும் 100 உள்ளிட்ட சேவைகளும் முடங்கியது. தற்போது தீயணைப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…
தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…
ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…