ஆசிரியரா இவர், மிருகமா?… கைகளை முறுக்கி தடியால் தாக்கிய கொடூரம்… வகுப்பறையில் கதறிய பிஞ்சு உயிர்… துடிதுடித்துப் பலியான 8-ஆம் வகுப்பு மாணவி…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், சக மாணவியுடனான பிரச்சனை குறித்து முறையிடச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி க்ஷமா தீக்ஷித், அவரது ஆசிரியர் ராஜேந்திர கங்வாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் நியாயம் கேட்டு வந்த சிறுமியின் இரு கைகளையும் முறுக்கியதோடு மட்டுமின்றி, தடியால் மிகக் கடுமையாக ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி, துரதிர்ஷ்டவசமாக ஆகஸ்ட் 30 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயலைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரையும், பள்ளி முதல்வரையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்; மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்து இறப்பதற்கு முன்பு அந்தச் சிறுமி வேதனையுடன் அளித்த மரண வாக்குமூலம், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான மிக முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது.

Gayathri

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

6 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

7 மணத்தியாலங்கள் ago