சினிமாவில் நடிகைகள் சந்தித்து வரும் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கையில் கேரள சினிமாவில் பெண்கள் போக பொருளாக பார்க்கப்படுவதாகவும் நடிகைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் புகார் அளித்து வருகிறார்கள்.
இது குறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், இந்த கமிஷன் என்ன செய்யும் அவர்களின் புகாரை வாங்கிக் கொள்ளுமே தவிர நடவடிக்கை எடுக்காது. ஹேமா கமிட்டிக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என கூறினார். மேலும் பேசிய அவர், நடிகை நதியாவிற்கு தொடர்ந்து வீரமணி தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சினிமாவில் எடிட்டர் எம் ஜி வள்ளவனிடம் நதியா பலமுறை புலம்பியுள்ளார்.
இதற்கு அவர் கொடுத்த ஐடியா இனிமேல் இங்கு இருக்காது வெளிநாடு சென்றுவிடு என கூறினார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த நதியா சினிமாவை விட்டு விலக காரணமே அயோத்தி குப்பம் வீரமணி தான். அவரின் கட்டுப்பாட்டில் வர சொன்னார், ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் நதியா வெளிநாடு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதனைப் போலவே நடிகை ஸ்ரீதிவ்யா கடைசி காலத்தில் உடல்நிலை மோசமாகி திருவனந்தபுரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். அதற்குக் காரணம் அவர் பல கஷ்டத்தை அனுபவித்தார். சினிமாவில் பல தடைகளை தாண்டி ஒரு இடத்திற்கு வரும்வரை பெரிய போராட்டம் தான். சினிமாவில் நடக்கக்கூடிய கொடுமைகளை ஒன்றுமே செய்ய முடியாது என தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…