தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டு பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் டிசம்பர் 22 திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ (Physical or Psychological Harassment) எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து செல்வதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி அங்கும் இங்குமாக ஓடாமல், உதவியாளர் துணையுடன் வகுப்பறைக்கு வருவதற்கு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…