காஞ்சிபுரம் மாவட்டம் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பூபதிக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன். இனிமேல் உன்னோடு பேச மாட்டேன். காதலிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த மாணவி பூபதியின் இறப்பிற்கு தான் தான் காரணம் என நினைத்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை கண்விழித்து பார்த்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…