திருச்சியில் லால்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று காலை ஒரு காரில் அந்த வாலிபர் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஆறு வாலிபர்கள் காரில் சென்றிருந்தனர். இந்த கார் திருச்சி லால்குடி மெயின் ரோட்டில் சரஸ்வதி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் உடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலத்த காயமடைந்த நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50000 முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…