தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் இனி “அந்த சத்தமே கேட்காது”… அரசின் திடீர் அதிரடி உத்தரவு…!!!

Spread the love

தமிழக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ரேடியோ அல்லது டேப் ரெக்கார்டர்களைப் பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பேருந்து பயணத்தின்போது அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்படுவதால் தங்களுக்கு மிகுந்த அசவுகரியம் ஏற்படுவதாகவும், கவனச்சிதறல் உண்டாவதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில் ‘ பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பயணிகளின் அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இந்த உத்தரவு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுப் பேருந்துகளில் எக்காரணம் கொண்டும் ரேடியோக்களோ அல்லது ஒலிப்பதிவு செய்யும் கருவிகளோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இந்த விதிகளை மீறிச் செயல்படும் பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது பேருந்து பயணத்தை அதிக சத்தம் இல்லாத சூழலாக மாற்றுவதுடன், ஓட்டுநர்கள் கவனச்சிதறல் இன்றி வாகனத்தை இயக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

5 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

5 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago