பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாகச் சென்னையிலிருந்து மதுரை, நெல்லை போன்ற பகுதிகளுக்குச் செல்ல 4,000 ரூபாய்க்கும் மேல் கட்டணம் கேட்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தடுக்கத் தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், விதிகளை மீறும் பேருந்துகளைக் கண்காணிக்கவும், அபராதம் விதிக்கவும் மாநிலம் முழுவதும் சிறப்புப் பறக்கும் படைகளை அமைத்துள்ளது. அதிகக் கட்டணம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கப் பொதுமக்களுக்காக மண்டல வாரியாகப் பிரத்யேக உதவி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. தலைமையகம் (சென்னை) – கட்டணமில்லா எண்: 1800 425 6151. வாட்ஸ்அப் புகார் எண்: 90433 79664.
பயணிகள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்துத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலம் குரல் பதிவாகவோ புகார்களைப் பதிவு செய்யலாம். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணச் சுரண்டலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…
தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…