KPYயில் பிரபலமான நடிகர் பாலா, தற்பொழுது “காந்தி கண்ணாடி” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, KPY பாலாவுக்கு ஸ்மால் அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது, “நிறைய தானம் தர்மம் பண்றவன் கையில எப்போதும் காசு இருந்துகிட்டே இருக்கணும். எல்லாத்தையும் கொடுத்தாலும் உனக்குனு கொஞ்சம் காசு வச்சுக்கணும். நிறைய பேருக்கு உதவி பண்றவங்க கீழே விழுந்தா, உதவி பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருக்கும் பயம் வந்துடும். அந்த பயத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்க” என்று கூறினார்.
KPY பாலா தற்போது தனது சொந்த செலவில் மருத்துவமனை கட்டி வருகிறார். தன் சொந்த வீடு கட்டுவதற்காக வாங்கிய நிலத்தில், வீடு கட்டாமல் இலவச மருத்துவமனை கட்டி வருகிறார். இலவச மருத்துவமனை கட்டுவது தனது கனவு என்று கூறினார். வீடு கட்டினால் அதில் நானும் என் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் இப்பொழுது இங்கு மருத்துவம் பெறும் பலரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழ்வார், என்று தனது விருப்பத்தை தெரிவித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் “மதராஸி” படம் ரிலீஸ் அன்று உங்கள் படத்தையும் ரிலீஸ் செய்கிறீர்களே? என்று கேட்டதற்கு, “அண்ணன் சிவகார்த்திகேயன் எப்போதும் டாப் தான். அவர் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். அவர் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எங்கள் படத்திற்கு வருவாங்க என்ற நம்பிக்கையில் தான் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தோம்” என்று கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…