தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது நெருங்கிய உறவினரான தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காகவே தான் இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கும் ஓர் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும், எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுவாகவே இருப்பதால் அதன்படி ஆட்சி தொடரும் என்றும் கூறினார். அதேவேளையில், கோவை சிறுமி கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் என்றும், அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை என்றும் பதிலளித்தார்.
மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர், “இது தொடர்பான விவரங்கள் எனக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை; உரிய நேரத்தில் இந்த விவரங்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அதனைத் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…
பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…
உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…