“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது நெருங்கிய உறவினரான தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காகவே தான் இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கும் ஓர் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும், எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுவாகவே இருப்பதால் அதன்படி ஆட்சி தொடரும் என்றும் கூறினார். அதேவேளையில், கோவை சிறுமி கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் என்றும், அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை என்றும் பதிலளித்தார்.

மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர், “இது தொடர்பான விவரங்கள் எனக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை; உரிய நேரத்தில் இந்த விவரங்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அதனைத் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

“நான் சொல்றதைத்தான் அவர் செய்வார்!”.. இஸ்ரேல் பிரதமரை ஒற்றை வார்த்தையில் அடக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. ஈரான் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…

21 seconds ago

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!.. 12,256 காலிப் பணியிடங்கள்.. SSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…

9 minutes ago

“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்!”.. போலீசுக்கு போன் செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…

23 minutes ago

“தோனி இல்லாத சிஎஸ்கே அவ்வளவுதானா?.. அடுத்த 5 வருஷத்துக்கு கப் கிடையாது?.. அதிரவைக்கும் முன்னாள் வீரரின் கணிப்பு”..!!

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…

31 minutes ago

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

35 minutes ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

40 minutes ago