#image_title
பிரபல இசையமைப்பாளரான ரகுநந்தன் கடந்த 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் ரிலீசான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த திரைப்படத்திற்காக ரகுநந்தன் இந்திய தேசிய திரைப்பட விருதை வென்றார்.
பின்னர் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீசான கிருஷ்ணவேணி பாஞ்சாலை திரைப்படத்திற்கு இசையமைத்தார். அதே ஆண்டு சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கும் இவர்தான் இசையமைத்தார். இன்று சூப்பர் ஹிட் ஆகிய நாம் கேட்டுக் கொண்டிருந்த பல பாடல்கள் ரகுநந்தன் இசையில் உருவான பாடல்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
சூப்பர் ஹிட் லிஸ்டில் அமைந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள் உள்ளது. அந்த வகையில் மஞ்சப்பை படத்தில் வரும் பார்த்து பார்த்து உன்ன பார்த்து என்ற பாடல், சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இறக்கை முளைத்து என்ற பாடல், மஞ்சப்பை படத்தில் வரும் ஆகாச நிலவு தான் ஆகிய பாடல்கள் ரகுநந்தன் இசையில் உருவானது.
அடுத்ததாக மதயானை படத்தில் வரும் கோண கொண்டகாரி பாடல், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வரும் ஏடி கள்ளச்சி என்ற பாடல், அயோத்தி படத்தில் வரும் காற்றோடு பட்டம் போல என்ற பாடல், நீர்ப்பறவை படத்தில் வரும் பரபர பறவை ஓன்று என்ற பாடல் ஆகியவை இவரது இசையில் உருவான பாடல்கள் ஆகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…