Categories: CINEMA

75 கோடி கடன்.. அயலான் படத்துக்காக சிவகார்த்திகேயன் செய்த தில்லாலங்கடி வேலை.. இவ்ளோ நடந்துருக்கா..?

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த கடைசி நேரத்தில், பிரச்னை ஏற்பட்டதால் சிவகார்த்திகேயன் ரூ. 27 கோடி பணம் கொடுத்ததால் இந்த படம் ரிலீஸ் ஆனது என்ற தகவல் பரவியது. இது உண்மைதான் என்றாலும், அது சிவகார்த்திகேயன் செய்த தியாகமாக, அவர் செய்த பெரிய உதவியாக பலராலும் பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார்.

இதுகுறித்து பிஸ்மி கூறியதாவது, சிவகார்த்திகேயனின் பினாமியாக செயல்பட்டவர் ஆர் டி ராஜா. இவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் படங்கள் துவக்கத்தில் வெளிவந்தன. வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனை பெரிய நடிகராக உருவாக்கவும், பப்ளிசிட்டிக்காக பில்டப் செய்யவும் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்ற பிரபல நடிகைகளை ஜோடியாக நடிக்க வைத்து அந்த படங்கள் எடுக்கப்பட்டது.

உண்மையில் அந்த படங்களின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்றாலும், பினாமியாக செயல்பட்டவர்தான் ஆர் டிராஜா. இப்படி படங்கள் தயாரித்த வகையில், ரூ. 75 கோடி வரை கடன்கள் ஏற்பட்டது. இந்த கடன்களை தனது பினாமி தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தலையில் கட்ட சிவகார்த்திகேயன் திட்டமிட்டார். ஆனால், இதையறித்த ஆர் டி ராஜா, உங்கள் படங்களுக்காக தான் இந்த கடன்கள் வாங்கப்பட்டது. இதில் எனக்கு சம்பந்தமில்லை என ஒதுங்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த கடன்களை வேண்டாவெறுப்பாக சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.

இந்த 75 கோடி ரூபாய் கடனை தனது சொந்த பணத்தில் தரக்கூடாது என சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருந்த இந்த சூழலில், தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ், அவரிடம் பலியாடாக சிக்கினார். அப்போது அவர் அந்த கடன்களை 22 கோடி, 23 கோடி ரூபாயக தருவதாக ஏற்றுக்கொண்டார். அதற்கு காரணம், தொடர்ந்து அவரது தயாரிப்பில் படங்களில் நடிக்க கால்ஷீட் தர சிவகார்த்திகேயன் அக்ரிமென்ட் போட்டார்.

ஆனால் ஹீரோ உள்ளிட்ட படங்கள் ஓடாததால், அடுத்தடுத்த கால்ஷீட் சிவகார்த்திகேயன் தரவில்லை. இந்த சூழலில்தான், அந்த பணத்தை தர வேண்டும் என கடன்தாரர்கள் தரப்பில் அழுத்தம் கொடுத்த போது, கேஜேஆர் ராஜேஷ், உண்மை நிலவரத்தை கூறிவிட்டார். இதையடுத்து, கடன் பணத்தை தந்தால்தான் அயலான் படத்தை வெளியிட விடுவோம் என கடன்காரர்கள் தரப்பில் பிரச்னை செய்ததால், அந்த 27 கோடி ரூபாய் தொகையை, தனது படங்களுக்காக முன்னால் வாங்கிய கடனை சிவகார்த்திகேயன் தந்துள்ளார். மற்றபடி அவர் அந்த பணத்தை சும்மா தரவில்லை என்று பிஸ்மி தெளிவுபடுத்தியுள்ளார்.

Sumathi
Sumathi

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago