Categories: CINEMA

“சிவாஜியையே வியக்க வைத்த அமெச்சூர் நடிகர்… ஒனக்குள்ள இப்படி ஒரு திறமையா?” … வியந்து போய் விருந்து வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். அவரை நடிப்புப் பல்கலைக் கழகம் என்றே சொல்லலாம். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

நாடக உலகில் இருந்து வந்ததால் அவருக்கு நாடகத்தின் மேல் அளவற்ற காதல் இருந்தது. அதனால்தான் சில ஆண்டுகள் அவர் தன்னுடைய நாடகக் குழு ஒன்றையும் தொடர்ந்து நடத்தி வந்தார். அடிக்கடி நாடகங்களை சென்று பார்க்கும் வழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. அப்படி நாடகங்கள் பார்க்கும் போது அவை பிடித்துவிட்டால் அவற்றை சினிமாவாக்கி நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.

அப்படி ஒரு முறை அவர் நகைச்சுவை நாடகம் ஒன்றை பார்க்க சென்று அதில் நடித்த ஒரு நடிகரை பார்த்து வியந்துள்ளார். இத்தனைக்கும் அவர் முழுநேர நடிகர் கூட இல்லையாம். அந்த நாடகத்தின் கதாசிரியராம்.  சித்ராலையா கோபு எழுதி நடித்த ஒரு நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். ஒரு பாட்டு வாத்தியார், இளமையான தோற்றத்துக்கு மாறும் வகையில் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார்.

அந்த மருந்தை அவரது மனைவி தவறுதலாக தண்ணீரில் கலந்துவிடுகிறார். இந்த தண்ணீரை குடித்த அந்த குடும்பத்தினர் அனைவரும் இளமையாக மாறிவிடுகின்றனர். ஆனால் இளமையாக மாறிய பின்னர் அவர்கள் ஏனோதானோவென்று நடந்துகொள்வதை நகைச்சுவையாக உருவாக்கியதுதான் அந்த நாடகம்.

தண்ணீர் குடித்து இளைஞராக மாறிய அந்த பாட்டு வாத்தியார் கர்நாடக சங்கீதத்தில் இருந்து மாறி மாடர்ன் உலக  பாடல்களை பாடி ரசிகர்களை சிரிக்கவைத்துள்ளார். இந்த பாட்டு வாத்தியார் கேரக்டரில் நடித்தவர் சித்ராலையா கோபு. இவரின் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவாஜி கணேசன், நாடகம் முடிந்தவுடன், தனது டிரைவரை விட்டு, இந்த நாடகத்தில் நடித்த சித்ராலையா கோபு மற்றும் இயக்கிய கோபி ஆகிய இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

வந்தவர்களிடம் “கோபு, நீ நல்லா கதை எழுதுவன்னு தெரியும், நல்லா காமெடி பண்ணுவன்னு தெரியும். ஆனால் இவ்ளோ சிறப்பா நடிப்பன்னு எனக்குத் தெரியாதுடா” என வியந்து பாராட்டி விருந்து வைத்துள்ளார்.

vinoth

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

14 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago