#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள். ஆனால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
பாரதிராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து பணியாற்றிய முதல் படம் முதல் மரியாதை. இந்த படத்தின் போது சிவாஜிக்கும் பெரியளவில் மார்க்கெட் இல்லை. அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்தது.
ஆனால் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாரதிராஜா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஷூட்டிங்கின் போது எப்படி நடிக்க வேண்டும் என ராதாவுக்கு நடித்துக் காட்டியுள்ளார் பாரதிராஜா. அதைப் பார்த்த சிவாஜி “அவன் சொல்லித் தரதுல்ல ஒரு 10 சதவீதம் நடிச்சாக் கூட போதும். நல்லா வந்துடும்” என சொல்லியுள்ளார்.
அதைக் கேட்டு மகிழ்ந்து பாரதிராஜா “அண்ணே நான் சென்னைக்கு வந்ததே, நடிகர் ஆகி உங்கள காலி பண்ணனும்தான்” என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட சிவாஜி “ஏண்டா உங்க வீட்டுல எல்லாம் கண்ணாடியே இல்லயா? அதுல நீ உன் மூஞ்ச பாத்தததே இல்லையா?” எனக் கமெண்ட் அடித்தாராம். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா நடிகராக தமிழ் சினிமாவில் இப்பொது கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…