#image_title
பிரபல தயாரிப்பாளரான சிவா அம்மா பேஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான சொல்வதெல்லாம் உண்மை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கொரு தலைவன், சின்ன மாப்பிள்ளை, மாணிக்கம், சரோஜா, கனிமொழி, அரவான், கடவுள் இருக்கான் குமாரு, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சிவா சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, அரவான் படத்த ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன். அதனாலேயே அரவான் படத்துக்கு நினைத்ததை விட அதிகம் பட்ஜெட் ஆயிடுச்சு. இதனால அடுத்த கட்டத்துக்கு மூவ் பண்ண முடியல. என்ன பண்றதுன்னு தெரியல.
இது எப்படியோ நடிகர் பிரகாஷ் ராஜின் காதுக்கு போய் இருக்கு. ஒரு நாள் பிரகாஷ் சார் என்ன செல்போனில் கூப்பிட்டாரு. என்னாச்சுன்னு கேட்டாரு. அப்போ பிசினஸ் ஆகல. அரவான் படத்துக்கு இன்னும் பட்ஜெட் தேவைப்படுது. அதனால படம் அப்படியே இருக்குன்னு சொன்னேன். தமிழ்நாட்டில் கொஞ்சம் டல்லா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னு சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்துல பிரகாஷ்ராஜ் என்னோட ஆபிஸ்க்கு வந்தாரு.
இப்போ உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும் என்று கேட்டார். ஒரு கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். அந்த பணத்தை நான் தரேன். நீங்க அடுத்த கட்ட வேலையை பாருங்க அப்படின்னு சொன்னாரு. அங்க இங்கன்னு பேசி 4 கம்பெனில பேசி எப்படியோ எனக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி கொடுத்துட்டாரு. அது எனக்கு ஒரு மிகப்பெரிய உதவி என பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…