கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில், சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியைக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 9 மணியளவில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியையை, பள்ளி மேலாளரின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஊழியர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். பெண் ஆசிரியர்கள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது என்ற மேலாளரின் வாய்மொழி உத்தரவை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், மதிய உணவிற்காக மாணவர்களுக்குக் கொண்டு வரப்பட்ட முட்டை தட்டுடன் தலைமை ஆசிரியை பள்ளி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், தகவலறிந்து வந்த கொட்டாரக்கரா காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகே அவர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார். ஆசிரியர்களின் உடை சுதந்திரம் குறித்துப் பல்வேறு விவாதங்களை இச்சம்பவம் கிளப்பியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…