கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில், சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியைக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 9 மணியளவில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியையை, பள்ளி மேலாளரின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஊழியர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். பெண் ஆசிரியர்கள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது என்ற மேலாளரின் வாய்மொழி உத்தரவை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், மதிய உணவிற்காக மாணவர்களுக்குக் கொண்டு வரப்பட்ட முட்டை தட்டுடன் தலைமை ஆசிரியை பள்ளி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், தகவலறிந்து வந்த கொட்டாரக்கரா காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகே அவர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார். ஆசிரியர்களின் உடை சுதந்திரம் குறித்துப் பல்வேறு விவாதங்களை இச்சம்பவம் கிளப்பியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…