தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். அவருடைய மகள் அதிதி சங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அதிதி சங்கர் படங்களில் சில பாடல்களை பாடி பின்னணி பாடகி ஆகவும் பலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து முரளியின் மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் அதிதி நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிதி சினிமாவிற்கு வருவதற்கு தன்னுடைய அப்பா போட்ட கண்டிஷன் குறித்து பேசி உள்ளார். அதில், மருத்துவருக்கு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பு முடிந்ததும் நடிப்பேன் என கூறி இருந்தேன்.
அதற்கு என்னுடைய அப்பா ரொம்ப யோசித்து கடைசியாக ஒரு கண்டிஷன் போட்டார். நான் சினிமாவில் ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் மருத்துவப் பணிக்கு சென்று விட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன் என்று அதிதி கூறியுள்ளார். இப்படியான நிலையில் அதிதி சங்கர் சினிமாவில் தோல்வியை சந்தித்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது தன்னுடைய அப்பாவின் கண்டிஷனுக்கு ஏற்றது போல சினிமாவில் இருந்து விலகுவாரா என்பது இனிதான் தெரிய வரும். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…