சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது கோயில் பூசாரி பெரியசாமி, கடந்த 2024-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த மூன்று சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததோடு, ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். புனிதமான கோயில் சந்நிதி என்றும் பாராமல் இழைக்கப்பட்ட இந்த கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழங்கிய அதிரடித் தீர்ப்பில், கொலை மிரட்டல், சிறுவர்களைக் காயப்படுத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாகத் தண்டனைகள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதன்படி, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 70 வயதான இந்த முதியவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதியை வழங்கியுள்ளதாகப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…