“70 வயதில் ‘காமக் கொடூரம்’.. சாகும் வரை கம்பி தான்… சில்மிஷ தாத்தாவுக்கு நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்கிங்’ தீர்ப்பு…!

Spread the love

சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது கோயில் பூசாரி பெரியசாமி, கடந்த 2024-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த மூன்று சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததோடு, ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். புனிதமான கோயில் சந்நிதி என்றும் பாராமல் இழைக்கப்பட்ட இந்த கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழங்கிய அதிரடித் தீர்ப்பில், கொலை மிரட்டல், சிறுவர்களைக் காயப்படுத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாகத் தண்டனைகள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்படி, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 70 வயதான இந்த முதியவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதியை வழங்கியுள்ளதாகப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

6 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

11 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

12 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

18 minutes ago

“அந்த அங்கிள் பேண்ட்டை கழற்றி…” 4 வயது சிறுமிக்கு பாலியல் நோய்… 6 முறை கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கொடூர செயல்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…

19 minutes ago

ஐயோ… குழந்தையைக் காப்பாத்துங்க… கண் இமைக்கும் நேரத்தில்… சிறுமியைச் சூழ்ந்து கடித்துக் குதறிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…

24 minutes ago