“70 வயதில் ‘காமக் கொடூரம்’.. சாகும் வரை கம்பி தான்… சில்மிஷ தாத்தாவுக்கு நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்கிங்’ தீர்ப்பு…!

Spread the love

சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது கோயில் பூசாரி பெரியசாமி, கடந்த 2024-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த மூன்று சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததோடு, ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். புனிதமான கோயில் சந்நிதி என்றும் பாராமல் இழைக்கப்பட்ட இந்த கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழங்கிய அதிரடித் தீர்ப்பில், கொலை மிரட்டல், சிறுவர்களைக் காயப்படுத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாகத் தண்டனைகள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்படி, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 70 வயதான இந்த முதியவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதியை வழங்கியுள்ளதாகப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

5 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

5 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago