தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக். தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் ஆர்வம் கொண்டு தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதனைப் போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய க்யூட்டான சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறையை கொண்டாட ஜாலியாக அவுட்டிங் சென்றுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…