சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிருத்திகா லட்டு. இவர் முதல் முதலில் தேன்நிலவு என்ற சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன.
அதன்படி பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி சென்னை 600028, சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் விஜி எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது டெலிவரிக்கு பிறகு 6 மாதத்தில் 32 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம். அதெப்படி குறைத்தார் என்ற டயட் விவரம் வெளியாகியுள்ளது. வெயிட் லாஸ் செய்ய வாக்கிங் பெஸ்ட் என்கிறார் கிருத்திகா. காலை 2 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் வாக்கிங் செல்வாராம்.
6 மாதத்திற்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். காலை இளநீர், பால், மோர், பழச்சாறுகள் என 6 மாதம் பின்பற்றியுள்ளார். அரிசி, மாவு, சர்ச்சரை, உப்பு, எண்ணெய் இவற்றை தனது உணவு பட்டியலில் இருந்து அறவே நீக்கி விட்டாராம். குறைந்தது 2 லிட்டர் வெந்நீர் ஒரு நாளைக்கு குடிப்பாராம். தற்பொழுது இவரின் டயட் பிளான் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…
பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…
பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…