‘நான் பாட்டி ஆயிட்டேன்.. என் மகனுக்கு குழந்தை பொறந்துருச்சு’… புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகை கம்பம் மீனா…

By Begam

Updated on:

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியை  அவருடைய  கணவன் கோபி கொஞ்சம் கூட மதிப்பதில்லை.மேலும் ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் கோபி.

   

இப்படி சென்று கொண்டிருந்த இந்த சீரியல் தற்பொழுது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.தற்பொழுது கோபிக்கும் ராதிகாவுக்கும் பாக்கியாவின் கண் முன்னே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. கோபியின் அம்மா, அப்பா, குழந்தைகள் என மொத்த குடும்பமும் பாக்யாவின் பக்கமே உள்ளனர்.

தற்பொழுது ராதிகா வில்லியாக மாறி வருகிறார். இந்த சீரியலில் தற்பொழுது இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.இதைத்தொடர்ந்து தான் படிக்க விரும்பும் படிப்பை தற்பொழுது படிக்க கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்.  இந்த சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கம்பன் மீனா.

இந்த சீரியலில் இவர் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார் .

பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார் நடிகை கம்பம் மீனா. இவர் இந்த சீரியலில் மட்டுமின்றி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது மருமகளுக்கு வளைகாப்பு செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவரின் மருமகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் தனது instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை கம்பம் மீனா. தற்பொழுது இவரின் பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…