நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கொங்கு மண்டலப் பொறுப்பாளரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும் பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் தேர்தல் பணிகளைத் தீவிரமாக கவனித்து வந்ததால், செந்தில் பாலாஜியால் தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாமகவின் திலகபாமா, சிவகாசியில் தனது வாக்கைச் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்டதால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிகிறது.
தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4.83 கோடிக்கும் அதிகமானோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்றாலும், பதிவான வாக்குகளின் சதவீதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரப்படி, தருமபுரியில் அதிகபட்சமாக 90.13 சதவீதமும், ஈரோட்டில் 90.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் 80 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி ஆரோக்கியமான ஜனநாயகப் பங்கேற்பைக் காட்டியுள்ளன. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைவாக 75.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை மண்டலத்தைக் கைப்பற்ற திமுக தீவிர முனைப்பு காட்டிய நிலையில், அங்கு பதிவான 84.76 சதவீத வாக்குகள் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…