நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கொங்கு மண்டலப் பொறுப்பாளரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும் பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் தேர்தல் பணிகளைத் தீவிரமாக கவனித்து வந்ததால், செந்தில் பாலாஜியால் தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாமகவின் திலகபாமா, சிவகாசியில் தனது வாக்கைச் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்டதால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிகிறது.
தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4.83 கோடிக்கும் அதிகமானோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்றாலும், பதிவான வாக்குகளின் சதவீதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரப்படி, தருமபுரியில் அதிகபட்சமாக 90.13 சதவீதமும், ஈரோட்டில் 90.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் 80 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி ஆரோக்கியமான ஜனநாயகப் பங்கேற்பைக் காட்டியுள்ளன. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைவாக 75.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை மண்டலத்தைக் கைப்பற்ற திமுக தீவிர முனைப்பு காட்டிய நிலையில், அங்கு பதிவான 84.76 சதவீத வாக்குகள் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…
ஈரான் உடனான மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும்,…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில்…