தென்னிந்திய சினிமாவில் 1950 மற்றும் 60 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் பழம் பெரும் நடிகை விஜயகுமாரி. சிலப்பதிகாரம் கண்ணகியை நமக்கு பூம்புகார் திரைப்படம் மூலம் கண்முன் காட்டியை நிறுத்தியவர் விஜயகுமாரி. மறைந்த லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் மனைவி தான் இவர். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த விஜயகுமாரி நீண்ட நாட்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், என்னுடைய காதல் கணவர் எஸ் எஸ் ஆர் இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை அவர் இன்றும் உயிரோடு தான் இருக்கின்றார். தனிமையாக இருப்பதால் சில நேரங்களில் ஏன் எனக்கு இப்படி பண்ணிட்டார் என்று வருத்தப்படுவேன். அது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அவருடைய இறப்புக்கு நான் போய் அழுதேன். அப்போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் என்னை பார்த்து அழுதுட்டாங்க என்று தனது கணவர் குறித்து உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் 50 வருடங்களாக சாப்பாடே எடுத்துக் கொள்வது கிடையாது. தினம்தோறும் இரண்டு முட்டை தான் என்னுடைய காலை உணவு. தண்ணீரில் வர மல்லி, சீரகம், மிளகு மற்றும் ஜவ்வரிசி கலந்து முதல் நாளே சூடு பண்ணி பிளாஸ்க் ஒன்றில் வைத்துக் கொள்வேன். அந்த தண்ணியை தான் தொடர்ந்து குடிப்பேன். தினமும் மதிய உணவுக்கு முன்பு ஆப்பிள் அல்லது மாதுளை எடுத்துக் கொள்வேன். மதிய உணவுக்கு ஒரு இட்லி, மீன் குழம்பு, காய்கறிகள் எடுத்துக் கொள்வேன். பிறகு மாலை நேரத்தில் டீ மற்றும் இரண்டு பிஸ்கட் மட்டும்தான். கடைசியா இரவு உணவுக்கு ஒரே ஒரு இட்லி எடுத்துப்பேன் அல்லது தோசை. இதுதான் என்னோட டயட் பிளான் என்று 62 வயதாகும் விஜயகுமாரி பேசி உள்ளார்.
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…