இயக்குனர் நடிகருமான, செல்வராகவன் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆரியன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக செல்வராகவன் பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” உங்களுக்கு நடந்த விஷயங்களில் மிகவும் கோபம் வந்தது என்றால் எதை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு இன்னும் ஆறு மாதத்தில் நடக்கப் போகும் பயங்கரம். அதுவரும், இத்தனை முறை உன்னால் எப்படி எழுந்து நிற்க முடிகிறது என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். கலை மீது எனக்கு இருக்கு காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட எனக்கு கல்லறை கட்டி பூசி முடித்துவிட்டார்கள். அதிலிருந்து ஒருவாரம் முன் தான் வெளியே வந்தேன். அது என்ன விஷயம் என்று இப்போது சொல்ல மாட்டேன். சரி காயப்படுத்தி விட்டார்கள் என்ன செய்வது? பேண்டேஜ் போட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு போக வேண்டும். அதற்கு அழனும் என்றால் 5 வருடம் கூட அழுது விட்டு போகலாம்” என்று கூறியுள்ளார் .
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…