ஷாக்கிங் வீடியோ: தந்தை கண்முன்னே 2 குழந்தைகள் மீது ஏறிய பள்ளிப் பேருந்து… சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலி… பால் வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love
பெங்களூருவில் பள்ளிப் பேருந்து மோதி இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 வயதான வர்ஷா மற்றும் 4 வயதான பானு ஆகிய இரு குழந்தைகளையும் அவர்களது தந்தை பால் வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பள்ளிப் பேருந்து, எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்து சக்கரம் ஏறியதில், அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை கண்முன்னே தனது இரு குழந்தைகள் பலியான இந்த சம்பவம் பெங்களூரு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.