“அந்த ஜாதிகாரங்களுக்கு மட்டும் தான் சீட்”…. சசிகலாவின் புதிய கணக்கு… முக்கியத் தலைவர்கள் கூண்டோடு விலகல்?…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் நான்கு முனைப் போட்டிகளிலிருந்து, தற்போது சசிகலாவின் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ மற்றும் ராமதாஸின் ‘பாமக’ கூட்டணி மூலம் ஐந்தாவது முனையை நோக்கி நகர்ந்துள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கைகூடாத நிலையில், சசிகலா தொடங்கியுள்ள இந்தப் புதிய கட்சி, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு இதுவரை 80 வேட்பாளர்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் சூழலில், நாளை முதல் தென் மாவட்டங்களில் சசிகலா தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும், கட்சி தொடங்கிய வேகத்திலேயே சசிகலாவுக்கு உள்ளிருந்தே பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, சசிகலா சிறையில் இருந்தபோதும், அவர் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களிலும் அவருக்கு அரணாக நின்ற நீண்டகால விசுவாசிகள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் அமமுக-விலிருந்து சமீபத்தில் பிரிந்து வந்து இணைந்தவர்களுக்கு மட்டுமே வேட்பாளர் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படுவதாக மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ‘சீட்’ அரசியலால் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அதிருப்தியின் உச்சமாக, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் பூவை கண்டன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், விசுவாசத்தை விட தற்காலிக அரசியல் லாபங்களுக்கே சசிகலா முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடினமான காலங்களில் உடனிருந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, தேர்தல் வெற்றிக்காக மட்டும் புதியவர்களை முன்னிறுத்துவது தங்களை அவமதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் முடியும் கடைசி நேரத்தில் எழுந்துள்ள இந்த உட்கட்சிப் பூசல், சசிகலாவின் தேர்தல் கணக்குகளைச் சிதைக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நாளை திருப்பரங்குன்றம், மதுரை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், இந்த அதிருப்தி அலைகளை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது சவாலான காரியமே. விசுவாசிகளின் குமுறலைத் தீர்க்கத் தவறினால், தேர்தல் களத்தில் கட்சியின் செல்வாக்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Nanthini

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

8 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

17 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

28 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

35 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

55 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago