#image_title
திருமண தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் ராதிகா வரலட்சுமி சரத்குமார் மூவரும் பிரபலங்களின் வீட்டுக்கு சென்று பத்திரிகை வைத்து வரும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சரத்குமாருக்கும் அவரின் மூத்த மனைவி சாயாதேவி இருவருக்கும் பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார். இதில் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்து வருகின்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சிம்பு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கா,ர் இரவின் நிழல் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் ஹீரோயினியாக மட்டுமில்லாமல் சர்க்கார், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வீரசிம்ஹாரட்டி, மைக்கல், ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் மும்பையில் மிக சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிக்கோலய் சச்தேவ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார் . தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் ஒரு ஆர்ட் கேலரியை வைத்திருக்கின்றார்.
தனது அப்பா தொடங்கிய இந்த ஆர்ட் கேலரியை தனது 16 வயதில் இருந்து கவனித்து வருகின்றார். திருமணம் அடுத்த மாதம் அதாவது ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகவும், பின்னர் லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் வரலட்சுமி சரத்குமார் உடன் சேர்ந்து பல பிரபலங்கள் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வைத்த நிலையில் அதைத்தொடர்ந்து நடிகர் பிரபு வீட்டிற்கு சென்று பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார்கள் பின்னர் நடிகர் பாலா, வந்தனா, நடிகர் கமலஹாசன் மற்றும் கனிமொழி எம்பி வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ்களை கொடுத்திருக்கிறார்கள் இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…