கணவனை கொன்று காரில் ஏற்றிச் சென்ற கள்ளக்காத ஜோடி…. 14 வயது மகனையும் வைத்து மனைவியின் பயங்கர பிளான்….!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் தொழிலதிபர் பூபதிக்கும் (43) அவரது மனைவி சுஜிதாஸ்ரீக்கும் இடையேயான திருமண வாழ்க்கையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஐடி ஊழியர் சந்தோஷ்ராஜ் (33) என்பவருடனான கள்ளக்காதல் புயலை வீசியது. இவர்களது சட்டவிரோத உறவு பூபதிக்கு தெரியவந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுஜிதாஸ்ரீ, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சந்தோஷ்ராஜை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

திட்டமிட்டபடி பூபதியை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றபோது அவர் திமிறவே, சுஜிதாஸ்ரீ தனது சிறுவனான மகனை விட்டு அரிவாள் மனையை எடுத்துவரச் செய்து கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். உடன் இருந்த சந்தோஷ்ராஜும் கத்தியால் குத்தியதில் பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மறைக்க, அதிகாலை வரை காத்திருந்து பூபதியின் உடலை காரில் ஏற்றி, சரபங்கா ஆற்றுப் பாலம் அருகே கொண்டு சென்று விட்டுள்ளனர். பின்னர் சுஜிதாஸ்ரீ தன் நகைகளை கழற்றி சந்தோஷ்ராஜிடம் கொடுத்துவிட்டு, மர்ம நபர்கள் வழிமறித்து கணவரை கொன்று நகையை பறித்துச் சென்றுவிட்டதாக ஓமலூர் போலீசில் புகார் அளித்து நாடகமாடினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் மற்றும் பகுதியில் ரத்தக்கறை இல்லாததையும், சுஜிதாஸ்ரீக்கு எவ்வித காயமும் ஏற்படாததையும் கண்டு சந்தேகமடைந்தனர். தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு ரத்தக்கறைகள் துடைக்கப்பட்ட தடயங்கள் சிக்கின. இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் நடத்தப்பட்ட கெடுபிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கொடூரத்தை அவர் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார், சுஜிதாஸ்ரீ மற்றும் சந்தோஷ்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Nanthini

Recent Posts

“காரில் பிணம்… கதறிய மனைவி”… ஒரே நாளில் போட்டுக்கொடுத்த ரத்தக் கறை…. ஓமலூர் தொழிலதிபர் கொலையில் அம்பலமான கொடூரம்….!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…

2 minutes ago

செப்டம்பர் 10-ல் லண்டன் பறக்கும் CM விஜய்…. விவாகரத்து வாபஸுக்குப் பின் காத்திருக்கும் சங்கீதா…. கசிந்த ரகசிய தகவல்….!

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…

10 minutes ago

“சட்டமன்றத்தில் திடீரென நுழைந்த இன்பநிதி”…. மாடத்திலிருந்து பார்த்த காட்சி… ஸ்தம்பித்த தலைமைச் செயலகம்….!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…

20 minutes ago

“அறிவாலயத்தில் திடீர் பூகம்பம்”…. தவெகவை எதிர்கொள்ள ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…. தொண்டர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு…..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…

27 minutes ago

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…

38 minutes ago

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

46 minutes ago