மும்பையில் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி மூதாட்டி ஒருவரிடம் கடந்த ஆறு வருடங்களாக 1.15 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை ஒர்லி பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வரும் நிலையில் அரசு ஊழியரான இவரது கணவர் இறந்துவிட்டார். இப்படியான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் மூதாட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பேசியுள்ளார். அப்போது உயிரிழந்த கணவர் பணத்தை எங்கள் அலுவலகம் திருப்பித் தர முடிவு செய்துள்ளது, ஆனால் உங்கள் கணவர் வரிபாக்கி வைத்திருப்பதால் நாங்கள் தரும் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்தும் படி கூறியுள்ளனர்.
இதனை நம்பி அந்த மூதாட்டி கடந்த ஆறு ஆண்டுகளாக 50 முறை அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறு சுமார் 1.15 கோடி ரூபாய் செலுத்திய பிறகும் வருமானவரித்துறை இடம் இருந்து மூதாட்டிக்கு எந்த ஒரு பணமும் வந்து சேரவில்லை. இது குறித்து உறவினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தந்த ஆலோசனையின் படி போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…