சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.
தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார்.
இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். தற்பொழுது புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்ததாக நளதமயந்தி என்ற பெயரில் புதிய சீரியலை களமிறக்க உள்ளது. இந்த சீரியலில் தான் ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இதற்காக பிரியங்கா போட்டோஷூட்டில் பங்கேற்ற நிலையில் அந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெகு விரைவில் சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த தகவலால் பிரியங்கா நல்காரி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும்.…
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை…
விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி…
திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த…
2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…
சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…