Categories: CINEMA

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை ஒழுங்காக முடித்துக் கொடுக்காமல் இருந்தால் அப்படத்தின் இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ நடிகர் சங்கத்திடம் சென்று புகார் கொடுப்பார்கள். அவர்கள் தீவிர விசாரணை செய்து அந்த நடிகர்கள் மீது தவறு இருந்தால் ரெட் கார்ட் கொடுப்பார்கள். இது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு வழக்கம்தான்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி இவர் தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக படம் வணிக ரீதியாக சரியான அடி வாங்கியது.

இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீள முடியாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்த வருத்தத்தை பல பேட்டிகளில் லிங்குசாமி பகிர்ந்து இருப்பார். அது மட்டும் இல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் லிங்குசாமி. அதில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் செய்து கொடுப்பதாக கமலஹாசன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி படம் நடித்து தரவில்லை என்று கூறியிருந்தார் இது தொடர்பாக லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் இந்த புகாரில் உத்தம வில்லன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது .புதிய படத்தில் 30 கோடி பட்ஜெட்டில் நடித்து தருவதாக கமலஹாசன் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் இன்னும் நடித்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்கள் ஒரு புகார் ஒன்றை கொடுத்து இருக்கின்றார். அதாவது சிம்பு நடித்த மாநகரம் திரைப்படத்தை தயாரித்தது வேல்ஸ் நிறுவனம் தான்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கொரோனா குமாரு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புக்கொண்டபடி கொரனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இந்த படத்தை முடித்துக் கொடுக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. இப்படி இருக்க கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை பார்த்த பலரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

7 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

9 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

9 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

10 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

10 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

11 hours ago