மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் நாளை ரிலீசாக உள்ளது.
எப்பொழுதும் நடிகர் விஜயின் திரைப்பட ட்ரைலர் ரோகினி தியேட்டரில் தான் வெளியிடப்படும். அதேபோல லியோ திரைப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் தளபதி ரசிகர்களின் வெறியாட்டத்தால் இருக்கைகள் சேதமடைந்து, ரூ . 10 லட்சத்திற்கும் மேல் ரோகினி தியேட்டர் நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.ஆனால் அவர்களே அதை சரிசெய்து கொள்வதாகவும், நஷ்ட ஈடு எதுவும் வேண்டாமெனவும் தெரிவித்திருந்தனர்.
தற்பொழுது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரோகிணி திரையரங்கம். அதாவது லியோ படம் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அதாவது, ரோகிணி திரையரங்கில் இதுவரை முன்பதிவு ஆன்லைன் எதுவும் தொடங்கவில்லை.
இதனால் ரசிகர்கள் நேரடியாகவே திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.அப்போது ‘லியோ படம் ரோகிணி திரையரங்கில் வெளியிட படாது’ என்ற அறிவிப்பு பலகை போட்டு வைக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வந்து விட்டார்கள். இதற்கு காரணம், ஷேர் பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது. இதேபோல பல திரையரங்குகளிலும் இதுவரை முன்பதிவு தொடங்கப்படவில்லையாம். ஒருதரப்பினர் ட்ரைலரால் ஏற்பட்ட சேதத்திற்கு ரோகினி திரையரங்கம் தளபதி ரசிகர்களை பழிக்குப்பழி வாங்குவதாகவும் கூறி வருகின்றனர் . இதோ இதுதொடர்பான வீடியோ…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…