ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோலங்கி என்பவர் கடந்த ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான 70 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். அதே சமயம் மாத தவணை தொகையாக 10,655 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் மின்சார ஆட்டோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளன.
இதனை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கிய நிலையில் ஆரம்பத்தில் ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 174 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 74 கிலோ மீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் ஷோரூமில் புகார் அளித்த நிலையில் ஷோரூம் ஊழியர்கள் ஆட்டோ குறைவான மைலேஜ் கொடுப்பதற்கான காரணம் குறித்து மோகனிடம் கூறவில்லை. அதேசமயம் ஆட்டோவில் ஏற்பட்ட பிரச்சனையையும் அவர்கள் சரி செய்யவில்லை.
இந்நிலையில் ஷோரூம் ஊழியர்களின் செயல்பாடு, ஆட்டோ மைலேஜ் குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மோகன் நேற்று மின்சார ஆட்டோ வாங்கிய ஷோரூமுக்கு சென்று ஷோரூமில் வாசலில் ஆட்டோவை நிறுத்தி தான் கொண்டு வந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் ஆட்டோ தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகனிடம் விசாரணை நடத்திய நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…