ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோலங்கி என்பவர் கடந்த ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான 70 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். அதே சமயம் மாத தவணை தொகையாக 10,655 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் மின்சார ஆட்டோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளன.
இதனை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கிய நிலையில் ஆரம்பத்தில் ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 174 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 74 கிலோ மீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் ஷோரூமில் புகார் அளித்த நிலையில் ஷோரூம் ஊழியர்கள் ஆட்டோ குறைவான மைலேஜ் கொடுப்பதற்கான காரணம் குறித்து மோகனிடம் கூறவில்லை. அதேசமயம் ஆட்டோவில் ஏற்பட்ட பிரச்சனையையும் அவர்கள் சரி செய்யவில்லை.
இந்நிலையில் ஷோரூம் ஊழியர்களின் செயல்பாடு, ஆட்டோ மைலேஜ் குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மோகன் நேற்று மின்சார ஆட்டோ வாங்கிய ஷோரூமுக்கு சென்று ஷோரூமில் வாசலில் ஆட்டோவை நிறுத்தி தான் கொண்டு வந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் ஆட்டோ தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகனிடம் விசாரணை நடத்திய நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…