மொத்தமாக குறைந்த மருந்துகள் விலை… இனி எல்லா மாத்திரையும் ரொம்ப கம்மி விலை தான்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் அத்யாவசிய மருந்துகளின் விலையை குறைத்துள்ளது. நீண்ட நாள் நோயாளிகளுக்கு இது பெரும் நிவாரணம் அளிக்கும். டெல்லியில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு ஒன்றில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய மருந்துகளின் விலையை குறைத்துள்ளது, மத்திய அரசு. இதன்மூலம் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் நிவாரணம் அடைவர் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையை தேசிய மருந்து விலை நிர்ணய(NPPA) ஆணையத்தால்  நிர்ணயிக்கபட்டது.

குறைந்த விலையில் காய்ச்சல் மருந்து 

காய்ச்சல்,உடல் வலி, வீக்கங்களை குறைக்க பயன்படுத்தப்படும்  அசெக்ளோஃபெனாக், பாராசிட்டமால் மற்றும் டிரிப்சின்  கைமோட்ரிப்சின் ஆகிய மருந்துகள் ரூ.13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.தினந்தோறும் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்கவும், மருத்துவ செலவுகளால் சிரமப்படும் எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் வகையில் இம் முயற்சி எடுக்கப்பட்டது.

நல்ல  தரம் உள்ள மருந்துகள்

கேடிலா நிறுவனம் தயாரிக்கும் மருந்து ரூ.15.01 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கம்ஸ் மருந்துகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் தயாரித்து டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின் விற்பனைக்கு வருகிறது.

குறைந்த விலையில் இதய நோய்

குறைந்த விலையில் இதய நோய் மருந்து இக்காலகட்டத்தில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதால்,அட்டோர்வாஸ்டேடின் (40 மி.கி)  மற்றும் க்ளோபிடோகிரெல் (75 மி.கி)  கலந்த மருந்துகளின் விலை ₹25.61 ஆக விலை சரிந்துள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான மருந்துகளின் விலை 1 மில்லிக்கு ரூபாய் 31. 77 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

குறைவான விலையில் மருந்து மகிழ்ச்சியில் மக்கள்

அதிகமான விலையில் மருந்துகள் கிடைப்பதால், பலரும் சிகிச்சையை  தவிர்க்கவே நினைக்கிறார்கள். இதனால் நோயின் அபாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதால் மருத்துவம் எளிமையாக கிடைக்கும். மத்திய அரசின் முடிவாள் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்தி, சமூக நலனின் ஒரு புதிய மாற்றம் ஏற்படும். வருங்காலத்தில் பல மருந்துகளின் விளையும் குறைக்கப்படும் என கருதப்படுகிறது. முழுமையான நோயற்ற சமூகத்திற்கான அடித்தளமாக இந்நடவடிக்கை அமையும்.

Srimathi

Recent Posts

சிறுவர்களை காப்பாற்ற பால்கனியில் இருந்து பாய்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட்… தெருநாயை விரட்டியடித்து… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி இணையவாசிகளின் இதயங்களை…

3 minutes ago

அட கடவுளே… 24 மணி நேரம் சேற்றில் போராட்டம்… நேபாள வெள்ளத்தில் அதிசயமாக மீட்கப்பட்ட இளம்பெண்… பெற்றோரை இழந்து தவிக்கும் சோகம்…!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில், 25 வயது இளம்பெண் ஒருவர் பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டார்.…

12 minutes ago

ஐயோ… போலீஸை ஓடவிட்டுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்… பாடகர் கொலை வழக்கில்… கோகி கும்பலின் பகீர் திட்டம்…!

கார்நாட் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் கோகி கும்பலைச் சேர்ந்த ஆர்யன் சித்து மற்றும் சத்யம் கடியான் என்ற…

14 minutes ago

“உடலில் நெளிந்த புழுக்கள்…” மரணப்பிடியில் சிக்கி தவித்த முதியவர்… கடவுளாக வந்து உயிரைக் காப்பாற்றிய வாலிபர்… கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் பளபளப்பான ஆடம்பர நகர வாழ்க்கைக்கு நடுவே, முதியவர் ஒருவர் ஆதரவின்றிச் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். போதிய பராமரிப்பும் உணவும்…

26 minutes ago