விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், சமீபத்தில் நிகழ்ந்த கோர வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் விபத்துகள் நிகழும் அபாயம் அதிகம் என்பதால், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, பட்டாசுகளுக்குத் தேவையான ரசாயன மருந்துகளைக் கலக்கும் பணிகளை அதிகாலை 6 மணிக்கே தொடங்கி, வெயில் ஏறுவதற்கு முன்பாக காலை 10 மணிக்குள் முடித்திட வேண்டும் என ஆலை நிர்வாகங்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும், விபத்துகளை அறவே தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், இனிவரும் நாட்களில் பட்டாசு உற்பத்தித் தொழிலில் மிகக் கண்டிப்புடன் பின்பற்றப்பட உள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…