தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை நிலைநாட்ட பல திட்டங்களை தீட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே இபிஸ்க்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இபிஎஸ் அதற்கு இடம் கொடுக்காமல் பாஜகவுடன் சேர்ந்து கட்சியை வழிநடத்தி வருகின்றார். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடிய முடிவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் அவர் சமீப காலமாக திமுகவுக்கு எதிராக பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அப்படியே தவிர்த்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் தனது ஒரே எதிரி என்ற நிலைப்பாட்டில் டிடிவி தினகரன் இருப்பதாலும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று தொடர்ந்து அவர் கூறி வருவதாலும் திமுகவில் அவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி இபிஸ்க்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…