Categories: CINEMA

இயக்குனர் ஸ்ரீதர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்..!!

பிரபல இயக்குனரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். கடந்த 1959-ஆம் ஆண்டு ரிலீசான கல்யாணப்பரிசு திரைப்படம் மூலம் ஸ்ரீதர் இயக்குனராக தனது வெற்றி பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் ஜெமினி கணேசன் சரோஜாதேவி விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர்.

வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கினார். அதன் பிறகு தேனிலவு, நெஞ்சம் மறப்பதில்லை, அலைகள், உரிமைக்குரல் ஆலய தீபம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை ஸ்ரீதர் இயக்கினார். இப்போது உள்ள இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு பெயர் வந்ததால் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகின்றனர்.

ஆனால் ஸ்ரீதர் அந்த காலத்தில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு ஒரு காரணம் இருந்தது. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஸ்ரீதர் ஒரு பங்குதாரராக இருந்தார். அவருடன் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன், ரத்தினம் ஆகியோரும் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதர் இயக்கிய கல்யாண பரிசு திரைப்படம் வெற்றி பெற்றதால் பல முன்னணி தயாரிப்பாளர்களிடம் இருந்து ஸ்ரீதருக்கு அழைப்பு வந்தது.

ஒரு சில நல்ல வாய்ப்புகளை மட்டும் ஸ்ரீதர் பயன்படுத்தி கொண்டார். அதில் வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களுக்கு உடன்பாடு இல்லை. வீனஸ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டும்தான் நீங்கள் படம் பண்ண வேண்டும் என அவர்கள் கூறியதால் தனது சுதந்திரத்திற்கு அது ஏற்றதாக இல்லை என ஸ்ரீதர் நினைத்தார். அதுமட்டுமில்லாமல் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்க ஸ்ரீதர் நினைத்தார்.

ஆனால் வசூலை குவிக்கும் கமர்சியல் படங்களையே பங்குதாரர்கள் விரும்பினர். இதனால் தனது ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான படங்களை இயக்க வேண்டும் என எண்ணி சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை ஸ்ரீதர் தொடங்கினார். இந்த நிறுவனம் 1960-இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தேன்நிலவு, காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

14 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

47 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago