பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கடந்த பிப்ரவரி 26 அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நீண்ட நாட்களாக இவர்களது காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இருவீட்டு பெரியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி மணவாழ்க்கையில் இணைந்துள்ளது.
இந்த திருமணத்தில் தெலுங்கு மற்றும் ராஷ்மிகாவின் பூர்விகமான குடகு முறைப்படி சடங்குகள் நடைபெற்றன. குறிப்பாக, ராஷ்மிகா அணிந்திருந்த பழமை வாய்ந்த ஜூவல்லரி ரக நகைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பிரம்மாண்ட திருமணத்திற்காக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய தங்க நகைகளை ராஷ்மிகா அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள், மணமக்களின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன. உதய்பூரில் நெருக்கமானவர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்த நிலையில், திரைத்துறை நண்பர்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் வருகிற மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…