தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது விவாகரத்து விவகாரம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மகளிர் தின விழாவில் பேசிய அவர், தனது விவாகரத்து வழக்கைப் பற்றி குறிப்பிடுகையில் “அது வொர்த்தே (Worth) இல்லை, அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியிருந்தார். விஜய்யின் இந்த தற்காப்புப் பேச்சு, அவரது கட்சியின் பெண் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியாரையே கொதித்தெழச் செய்துள்ளது.
விஜய்யின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஞ்சனா நாச்சியார், “எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒரு பக்கம் பெண்களின் உயர்வு மற்றும் பாதுகாப்பு பற்றி மேடையில் முழக்கமிட்டுவிட்டு, மறுபக்கம் தன் மனைவியின் உணர்வுகளை மதிக்காமல் பேசுவது முரணாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா என்றும் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விஜய்யின் இத்தகைய போக்கு இளைய தலைமுறையினரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் விஜய்யின் ரசிகர்கள், “எங்கள் தலைவன் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்வான்” என்று பதிவிடுவதைச் சுட்டிக்காட்டிய ரஞ்சனா, ஒரு தலைவரின் சொல்லும் செயலும் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி” என்ற பழமொழியை நினைவூட்டி, இளைய சமூகத்தைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் கலாச்சாரம் பெண்களை எப்போதும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதையே கற்றுக்கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட ரஞ்சனா நாச்சியார், தவெக கட்சியில் இருந்து கொண்டே இதைக் கேட்காவிட்டால் அது கட்சிக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சொந்த வாழ்க்கையில் மனைவிக்கு நேர்மையாக இல்லாத ஒருவர், எப்படி ஒட்டுமொத்தப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும் என்ற விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…